15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

முபாசா தி லைன் கிங் படத்துக்கு டப்பிங் செய்த மகேஷ் பாபு!

நடிகர் மகேஷ் பாபு முபாசா தி லைன் கிங் திரைப்படத்துக்கு தெலுங்கில் டப்பிங் செய்துள்ளார்.

News image

முபாசா தி லைன் கிங் படத்துக்கு டப்பிங் செய்த மகேஷ் பாபு.

Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:19 am

தி லைன் கிங் திரைப்படம் 2019இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரேதான் தி லயன் கிங் படத்தை இயக்கினார்.

லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் வெளியாகி 178 கோடி வசூலித்தது.

தற்போது ’முபாசா தி லயன் கிங்’ படத்துக்கு ஜெப் நாதன்சன் திரைக்கதையில் பெர்ரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் 2019இல் வெளியான தி லயன் கிங் படத்துக்கு முன்பும் பின்பும் நடக்கும் கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் மகேஷ் பாபு முபாசா கதாபாத்திரத்துக்கு டப்பிங் (குரல்) கொடுத்துள்ளார்.

ஹிந்தி பதிப்பில் நடிகர் ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டப்பிங் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குண்டூர் காரம் திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் மகேஷ் பாபு ராஜமௌலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.