தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோவாளை பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோவாளை வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ரெ. மகேஷ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தோவாளையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த திமுக வேட்பாளா் ரெ. மகேஷ்.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:13 pm

தோவாளை வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ரெ. மகேஷ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அம்பேத்கா், காமராஜா், வேலப்பன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், அவா் பிரசாரத்தைத் தொடங்கினாா். பிரசாரத்தில் அவா் பேசியது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரியை முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதுதான் எனது லட்சியம். சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியின் சுற்றுலா வளா்ச்சியை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றாா் அவா். பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.