காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

'அவர் கண்ணில் தெரிகிறது' : பிரியங்காவை விரும்புகிறாரா அபினய் ? என்ன சொல்கிறார் அபிஷேக் ?

பிக்பாஸ் ப்ரமோவில் பேசும் அபிஷேக், பிரியங்காவை அபினய்  விரும்புவதாக தெரிவிக்கிறார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:21 am

DIN

பிக்பாஸ் ப்ரமோவில் பேசும் அபிஷேக், பிரியங்காவை அபினய் விரும்புவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் நமிதா மாரிமுத்து திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சையானது. அவர் விலகியதற்கு பல்வேறு வதந்திகள் உலா வந்த நிலையில், அவர் சிறுநீரக தொற்று ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ச்சியை விட்டு விலகியிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வழக்கம் போல இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனித்தனி குழுவாக போட்டியாளர்கள் பிரியத் துவங்கியுள்ளனர்.  இதனால் போட்டியாளர்களிடையே பிரச்னை உருவாகத் துவங்கியுள்ளது. இன்று வெளியான முதல் ப்ரமோவில் அபிஷேக் போட்டியாளர்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஐக்கி பெர்ரி வினோத பிறவி போன்று தெரிகிறார். இசைவாணி தனது குடும்ப சூழ்நிலையை கூறி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் என போட்டியாளர்கள் பற்றி தனது கணிப்பைத்  தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரமோவில், அபிஷேக், பிரியங்கா, நிரூப் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் அபிஷேக், பிரியங்காவை அபினய் நேசிக்கிறார். அது அவர் கண்களிலேயே தெரிகிறது என்று பேசினார். அவர் சொல்வது உண்மையா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரிந்துவிடும். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.