/

மறக்க முடியாத அனுபவம்: பியர் கிரில்ஸுக்கு ரஜினி பாராட்டு

இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என ரஜினி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:39 pm

எழில்

‘மேன் வொ்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என ரஜினி தெரிவித்துள்ளார்.

கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா். படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடா்ந்து சென்னைக்குத் திரும்பிய நடிகா் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிஸ்கவரி சேனலின் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தாா்கள். அதனுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக  பண்டிப்பூர் காட்டுக்குச் சென்றிருந்தேன். அதில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பெரிய காயம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவியது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அங்கே புதா்கள் நிறைய இருந்தன. அதில் இருந்த முள்கள் ஒரு சில இடங்களில் குத்தியது, அவ்வளவுதான் என்றாா்.

படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பியர் கிரில்ஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என்று பியர் கிரில்ஸுக்குப் பாராட்டு தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் ரஜினி. இயக்குநர் கே. பாலசந்தர் குடும்பத்துக்கு உதவ ரஜினி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் கிடைத்துள்ள வருவாயை பாலசந்தர் குடும்பத்துக்கு ரஜினி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.