மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சாகச நிகழ்ச்சி - மேன் வெர்சஸ் வைல்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். யாரும் இல்லாத காடு, மலை, வனப்பகுதியில் பியர் கிரில்ஸ் இறக்கி விடப்படுவார். அந்த வனத்தில் தனியாளாக எவ்வாறு தன்னைக் காத்து, தனக்கான உணவை தேடி உண்டு, உயிர் வாழ அவர் முயற்சிக்கிறார் என்பது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும். இந்த சாகச நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பங்குபெற்றார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் பங்கேற்றார். உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பியர் கிரில்ஸும், பிரதமர் மோடியும் பங்கேற்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான முக்கிய காரணங்கள் குறித்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அந்த நிகழ்ச்சியில் மோடி பேசினார். மோடி பங்கேற்ற இந்தச் சிறப்பு நிகழ்ச்சி உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒளிபரப்பானது.
இந்நிலையில் மோடியைத் தொடர்ந்து, மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்கவுள்ளார். கர்நாடகத்திலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இன்றும் வியாழன் அன்றும் இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. காட்டுப்பகுதியில் ஒருநாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறவேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்று வரும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டுள்ளார். ரஜினிக்குத் துணையாக அவருடைய இளைய மகள் செளந்தர்யாவும் சென்றுள்ளார். வியாழன் அன்று நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்துகொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


