மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஹிந்திப் பட டிரெய்லரில் ஒலித்த விஸ்வாசம் பட பின்னணி இசை: இமான் புகாருக்குப் பிறகு நடவடிக்கை எடுத்த தயாரிப்பு நிறுவனம்!

அந்தப் படத்தின் டிரெய்லரில் இமான் இசையமைப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருந்தது....

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 9:43 am

ரிதேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, தாரா நடிப்பில் மிலாப் ஸவேரி இயக்கத்தில் உருவான ஹிந்திப் படம் - மர்ஜாவான். நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இசை - தனிஷ்க் பக்சி, மீட் ப்ரோஸ், பாயல் தேவ். 

அந்தப் படத்தின் டிரெய்லரில் இமான் இசையமைப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ட்விட்டரில் இதுகுறித்து புகார் அளித்தார் இசையமைப்பாளர் இமான். மர்ஜாவான் படத்தில் விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டது எனக்குத் தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்தோ ஆடியோ நிறுவனத்திடமிருந்தோ இதுகுறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றார். 

இதையடுத்து யூடியூபில் வெளியான மர்ஜாவான் பட டிரெய்லரின் குறிப்பில் பின்னணி இசை - இமான் எனச் சேர்க்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.