மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்கவில்லை: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சு

மத்திய அரசு ஹிந்தி மொழியைத் திணிக்கவில்லை. மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை...

News image
Updated On :27 செப்டம்பர் 2019, 12:15 pm

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டக் குறும்படப் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது:

மத்திய அரசு ஹிந்தி மொழியைத் திணிக்கவில்லை. மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இதனை அரசியல் ஆக்குகிறார்கள். ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என தவறான பிரசாரம் இங்குப் பரப்பப்பட்டு வருகிறது. பொது மொழி என ஒன்று இருப்பது அவசியம்.  90% மக்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரியவில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம். மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என உள்ளேன் என்று பேசினார். 

பிறகு செய்தியாளர்களிடம் ஞானவேல் ராஜா பேசியதாவது: ஹிந்தி என்பது இன்னொரு மொழி. ஹிந்தி திணிப்பு அல்ல, ஹிந்தி படிப்பு. பொதுவாக ஒரு மொழி இருப்பது தவறில்லை என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.