பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படத்தின் வெளியீட்டுக்கு நெல்லையில் தடை விதிப்பு

நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாநகரத்தில் சங்கத் தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2019, 11:22 am

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத் தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாகவிருந்தது. இந்நிலையில் லிப்ரா நிறுவனத்துக்கு எதிராக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்துள்ள வழக்கில் நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தின் 10 திரையரங்குகளில் சங்கத் தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2013-ல் நளதமயந்தி படத்தை வெளியிட லிப்ரா நிறுவனம் விக்னேஷ் பிக்சர்ஸிடம் கடனாகப் பெற்ற ரூ. 15 லட்சத்தைத் திருப்பித் தராததால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு வாரத்துக்கு நெல்லை மாவட்டத்தில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டதோடு பணத்தை உடனடியாகத் திருப்பித் தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.