கேரளாவில் விதிகளை மீறி அதிக திரையரங்குகளில் விஜய் நடித்த பிகில் படத்தை வெளியிட்டதால் நடிகர் பிருத்விராஜுகுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது. தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.
கேரளாவில் பிகில் படத்தை மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டார். படத்துக்கு அதிக வரவேற்பு இருந்ததால் கேரளாவில் 200-க்கும் அதிகமான திரையரங்குகளில் பிகில் படம் வெளியானது. முதல் நாளில் கேரளாவில் ரூ. 4.80 கோடி வசூலித்து கேரளாவில் இந்த வருடம் அதிகமாக வசூலித்த 2-வது படம் என்கிற பெருமையைப் பெற்றது.
ஆனால், கேரளாவில் பிற மொழிப் படங்களை 120 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடக்கூடாது என்று கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்த விதிமுறையை மீறி அதிக திரையரங்குகளில் பிகில் படத்தை வெளியிட்டதால் மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிகில் பட வசூலில் ஒரு பகுதியை கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு அளிக்கவேண்டும் என்று மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோருக்கு கேரளத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கட்டளையிட்டுள்ளது. இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால் வருங்காலத்தில் மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் வெளியிடும் படங்களை வெளியிட மாட்டோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


