திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

நான் மீண்டும் வெற்றியுடன் வருவேன்! அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா விமரிசகர்களுக்கு பதிலடி!

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘நோட்டா’. படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர்கள்

News image
Updated On :14 அக்டோபர் 2018, 8:30 am

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘நோட்டா’. படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர்கள் வெளிவந்த சமயத்தில் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய படமிது. விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் இப்படம் வெளியானது.

நோட்டாவுடன் அதே சமயத்தில் வெளியான 96, ராட்சசன் மற்றும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களும் வெளிவந்தன. மற்ற படங்கள் அதிகளவு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், நோட்டா கவனம் பெறாமல் போனதுடன் எதிர்மறையாகவும், கலவையான விமரிசனங்களை பெற்றது. இது குறித்து தனது ட்விட்டரில் விஜய் தேவரகொண்டா பதிவிட்டது.

நோட்டோ படத்தைப் பார்த்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படம் சில ரசிகர்களால் சரியாக வரவேற்கப்படவில்லை. நான் அதற்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை. அதற்காக நான் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கிறேன். இந்த படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களை கேட்டேன். இது எனக்கு ஒரு பாடம். நான் கணக்கிட்ட சில விஷயங்கள் தவறாகிவிட்டன. வெற்றியோ, தோல்வியோ அது நான் யார் என்பதை நிச்சயம் பாதிக்காது. என் தோல்விகளை கொண்டாடுபவர்கள். நன்றாக கொண்டாடிக் கொள்ளுங்கள். நான் மீண்டும் வெற்றியுடன் வருவேன் என்று கூறியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.