நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

மன அழுத்தப் பிரச்னையால் தூக்குப் போட்டு டிவி நடிகை தற்கொலை!

கொல்கத்தாவில் 23 வயது இளம் டிவி நடிகை, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை விளைவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:27 pm

PTI

கொல்கத்தாவில் 23 வயது இளம் டிவி நடிகை, நேற்று (மார்ச் 10, 2018) தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை விளைவித்துள்ளது. மெளமிதா சாஹா என்ற அந்த நடிகை, பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்காக தெற்கு கொல்கத்தாவின் ரீஜென்ட் பார்க்கிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடெடுத்து தனியாக வசித்து வந்தார். 

சில டிவி சீரியல்களில் நடித்திருந்தாலும், தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இரவு வெகு நேரமாக மெளமிதாவை அவரது பெற்றோர்கள் மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமல் இருக்கவே, அவர்கள்  சந்தேகம் அடைந்து  உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை முழுவதும் அந்த வீட்டி கதவு திறக்கப் படமால் இருக்கவே அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு கதவை பல முறை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் அவரால் திறக்கவும் முடியவில்லை. சந்தேகம் வலுப்பெற்று அவர் உடனடியாக போலீலில் புகார் அளித்தார்.

அங்கு வந்த போலீசார்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மெளமிதா சாஹா ஃபேனில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். அவரது அறையில் இருந்த தற்கொலைக் கடிதத்தைப் போலீசார் கைப்பற்றினர். நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைக் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.