எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் எடுக்கிறாரா பா.ரஞ்சித்?

காலாவை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:59 pm

சினேகா

காலாவை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கபாலி, காலா என தொடர்ந்து இரண்டு தடவை சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்துவிட்ட ரஞ்சித். அடுத்து யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு திரை ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார் ரஞ்சித். 

இந்நிலையில் ரஞ்சித்துக்கு தற்போது பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து பா.ரஞ்சித் கூறுகையில் இந்திப் படம் இயக்க கேட்டுள்ளார்கள், ஆனால் இன்னும் நான் முடிவெடுக்கவில்லை, விரைவில் அறிவிக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

இது ஒரு புறமிருக்க, ரஞ்சித் அடுத்து நடிகர் விஜயுடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். இந்தப் படத்தில் விஜய் குத்துச் சண்டை வீரராக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை மெட்ராஸ் படத்தைப் போல விறுவிறுப்பாக வடிவமைத்துள்ளாராம் ரஞ்சித். வித்யாசமான விஜய்யை இந்தப் படத்தில் பார்க்க முடியும் என்கிறார்கள். முதல் முறையாக ரஞ்சித் விஜய் இணையவிருப்பதால், இந்தப் புதிய கூட்டணிக்கான எதிர்ப்பார்ப்பும் இப்போதே தொடங்கிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.