தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து!

இன்று மும்பை வொர்லி பகுதியிலுள்ள 'பியூ மான்டே டவர்ஸ்’ (Beau Monde Towers ) எனும் அடுக்ககத்தின்

News image
Updated On :13 ஜூன் 2018, 11:30 am

இன்று மும்பை வொர்லி பகுதியிலுள்ள 'பியூ மான்டே டவர்ஸ்’ (Beau Monde Towers ) எனும் அடுக்ககத்தின் பி பிரிவு 33-வது தளத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்து ஏற்பட்ட பி-பிரிவில் (B-Wing) தான் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வசித்து வருகிறார் என்ற தகவல்கள் மீடியாவில் வெளியாகி பரபரப்பானது. தீபிகாவுக்கு சொந்தமான ப்ளாட் 26-வது மாடியில் உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் வீட்டின் பணியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் என்றும் தீபிகா படுகோன் படப்பிடிப்புக்காக வெளியே சென்றுள்ளார், அவரது வீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தீபிகா தரப்பினர் மீடியாவிடம் கூறினர்.

இந்த தீ விபத்திலிருந்து 90 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.