டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து!

இன்று மும்பை வொர்லி பகுதியிலுள்ள 'பியூ மான்டே டவர்ஸ்’ (Beau Monde Towers ) எனும் அடுக்ககத்தின்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:36 pm

சினேகா

இன்று மும்பை வொர்லி பகுதியிலுள்ள 'பியூ மான்டே டவர்ஸ்’ (Beau Monde Towers ) எனும் அடுக்ககத்தின் பி பிரிவு 33-வது தளத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்து ஏற்பட்ட பி-பிரிவில் (B-Wing) தான் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வசித்து வருகிறார் என்ற தகவல்கள் மீடியாவில் வெளியாகி பரபரப்பானது. தீபிகாவுக்கு சொந்தமான ப்ளாட் 26-வது மாடியில் உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் வீட்டின் பணியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் என்றும் தீபிகா படுகோன் படப்பிடிப்புக்காக வெளியே சென்றுள்ளார், அவரது வீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தீபிகா தரப்பினர் மீடியாவிடம் கூறினர்.

இந்த தீ விபத்திலிருந்து 90 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகிறார்கள்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.