இன்று சமூக பிரச்னைகள் பற்றியும், சீர் திருத்தங்கள் பற்றியும் இந்தியா முழுவதிலும் பல இயக்குநர்கள் படம் எடுத்து வரும் நிலையில் இவை அனைத்திற்கும் ஒரு முன்னோடியாக விளங்கியவர் இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம் என்பதை அறிவீர்களா? பாம்பே, சிவாஜி, கத்தி, அறம், தனி ஒருவன் போன்ற படங்களின் பெயரை கேட்டவுடன் நமது நினைவிற்கு வருவது என்னவோ அந்தப் படங்களில் இருக்கும் ஆழமான சமூக பிரச்னை நிறைந்த கதைக்களம் தான். இவை மட்டும் இல்லை இந்தியா முழுவதிலும் இன்றைய காலகட்டத்தில் சமூக பிரச்னைகள் பற்றி பேசும் ஆயிரத்திற்கும் அதிகமானா படங்களை சுட்டிக் காட்டலாம், ஆனால் 1939-ம் ஆண்டிலேயே ஒரு பெண் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை போராட்டங்கள் பற்றியும் இந்தச் சமூகத்தில் அவள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் ‘ஆத்மி’ என்ற ஒரு அழுத்தமான திரைக்கதையை தந்தவர் இவர்.