சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சுல்தான், டங்கல் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்த பாகுபலி 2

ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பாகுபலி 2 படத்துக்கு முதல் மூன்று நாள்களில்...

News image
Updated On :1 மே 2017, 11:00 am

ஹிந்தியில் ஒரு டப்பிங் படம் வசூலில் நம்பமுடியாத சாதனைகளை எல்லாம் செய்யும் என எதிர்பார்க்க முடியுமா? அதுவும் கான்களும் பெரிய பெரிய இயக்குநர்களும் உள்ள ஒரு திரையுலகில்.

முடியும் என்று நிரூபித்துக்காண்பித்துள்ளது பாகுபலி 2. முதல் மூன்று நாள்களின் வசூலில் சுல்தான், டங்கல் பட சாதனைகளைத் தகர்த்துள்ளது.

இதுவரை முதல் மூன்று நாள்களில் அதிக வசூல் பெற்ற படமாக அமீர் கானின் டங்கல் இருந்தது. அது முதல் மூன்று நாள்களில் ரூ. 107 கோடி அள்ளியது. இரண்டாம் இடத்தில் சல்மான் கான் நடித்த சுல்தான் படம் ரூ. 105 கோடி. ஆனால் இந்த இரு சாதனைகளையும் தகர்த்து முதல் இடம் பிடித்துள்ளது பாகுபலி 2.

ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பாகுபலி 2 படத்துக்கு முதல் மூன்று நாள்களில் ரூ. 128 கோடி கிடைத்துள்ளது. வெள்ளியன்று ரூ. 41 கோடி, சனி ரூ. 40.5, ஞாயிறு ரூ. 46.5 கோடி. இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஹிந்தியில் இப்படத்தை வெளியிட்ட கரண் ஜோஹர். 

வருங்காலத்தில் இந்தச் சாதனையும் உடைபடலாம். ஆனால் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படமான பாகுபலி 2 இதைச் சாதித்தது உண்மையிலேயே மகத்தான சாதனைதான்.

வட இந்திய ரசிகர்களுக்குத் தென்னிந்தியப் படங்களின் மகத்துவத்தை அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாமல் ஒரு படத்தை ஹிந்தியில் டப் செய்து இந்தளவுக்கு வசூலை அள்ளமுடியும் என்கிற ஓர் உதாரணத்தையும் தென்னிந்தியத் திரையுலகுக்கு வழங்கியுள்ளது பாகுபலி 2. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.