மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிக் பாஸ் நிகழ்ச்சியால் உண்டான பிரிவு: நடிகை நிஷா உருக்கமான பதிவு!

உங்களை மீண்டும் பார்ப்பேன், அணைத்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் உள்ளேன்...

News image
Updated On :30 ஜூன் 2017, 10:39 am

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கலந்துகொண்டுள்ளதால் அவரைப் பிரிந்துவாடும் அவருடைய மனைவியும் நடிகையுமான நிஷா, சமூகவலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

என் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் அந்தத் தருணத்தை இழந்துள்ளேன். சரியாகப் பாடவராவிட்டாலும் பாடும் அந்த அழகைத் தவறவிடுகிறேன். என் சந்தோஷத்துக்காக நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்வீர்கள். இந்த நாளில் என்னுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன். என்னை விட்டு நீண்ட தூரம் இருப்பது என்னைக் கொல்கிறது. ஆனால் காத்திருப்பதில் ஒரு அர்த்தம் உண்டு என்பதால் இந்தக் காத்திருப்பும் எனக்குப் பலத்தை அளிக்கிறது. உங்களை மீண்டும் பார்ப்பேன், அணைத்துக்கொள்வேன் என்கிற நம்பிக்கையில் உள்ளேன் என்று எழுதியுள்ளார்.

தன்னுடைய பிறந்தநாளையொட்டி இந்தப் பதிவை நிஷா எழுதியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஷாவின் பிறந்தநாளைக் கொண்டாடினார் கணேஷ். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.