பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக பெல்ஜியம் புறப்பட்டுச் சென்றார் தனுஷ்!

தான் நடிக்கும் முதலாவது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர் தனுஷ் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திற்கு புறப்பட்டு சென்றார்.

News image
Updated On :28 ஜூன் 2017, 6:54 am

சென்னை: தான் நடிக்கும் முதலாவது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர் தனுஷ் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திற்கு புறப்பட்டு சென்றார்.

ரொமய்ன் பியுர்டோலஸ் என்ற பிரெஞ்சு நாவலாசிரியரின் கைவண்ணத்தில் உருவான  நாவல் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்' . இந்த நாவலைத் தழுவி இதே பெயரிலேயே ஹாலிவுட் படம் ஒன்று உருவாகி வருகிறது. பிரபல இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிப்பதற்காக, நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகையான உமா த்ருமன் நடிக்கும் இந்த படத்திற்கு நிகோலஸ் ஏரேரா மற்றும் அமித் திரிவேதி (ஹிந்தி பாடல்கள்) இசையமைக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மே மாதத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ் பங்கு பெற்றார்.

Story image

இந்நிலையில் இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ் புறப்பட்டுச் சென்றார். ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் தனஉஷ பங்கு பெறுவார் என்றும், அதன் பின் சென்னை திரும்புவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.