சில நாட்களுக்கு முன் நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்... அங்கே மணமக்களைப் பார்த்து விட்டு நான் நிம்மதியாக நடந்து வந்து கொண்டிருந்த போது... ஒரு இளம் வாரிசு நடிகர் ஒருவர் வருகை தந்தார். அடடா அவர் மட்டுமா வருகை தந்தார். அவரைச் சுற்றி அவருடைய பாதுகாவலர்கள் என்று ஒரு கூட்டமும் வருகை தந்தது. அவர்கள் வருகை தந்த வேகத்தில் ஒரு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த என்னை இடித்துத் தள்ளி விட்டு சென்றனர். அந்த நடிகரின் தாத்தாவுக்குத் தாத்தா அந்தக் காலத்தில் பெரிய நடிகராம்... இவர் இப்போதே பெரிய நடிகராக தன்னைப் பாவித்துக் கொள்வார் போல! இடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார்கள். எனக்கு மகாக் கோபமாகிவிட்டது. தடுமாறி திரும்பிப் பார்த்து... ‘என்ன கண் தெரியவில்லையா? இப்படி இடித்துவிட்டுப் போகிறீர்களே? என்று கேட்டால், நின்று பேசும் மரியாதைகூட இல்லாமல் சும்மா அலட்சியமாக மன்னிப்புக் கேட்பது போல பாவித்து விட்டு ஓடுகிறார்கள். திருமண வீட்டில் இப்போதும் பெண்கள் எங்களைப் போன்ற வயதான நடிகர், நடிகைகளைச் சுற்றிக் கொண்டு கொண்டாடுகிறார்கள். இம்மாதிரியான மரியாதை தெரியாத இளம் நடிகர்களை யார் பார்க்கப் போகிறார்கள்? இவர்களையும், இவர்களது பாதுகாவலர்களின் முகங்களையும் திருமண வீட்டில் யார் பார்க்கப் போகிறார்கள்? எதற்கித்தனை ஜபர்தஸ்து?! என்று கொதித்து விட்டார் ஜமுனா.