நடிகை ஸ்ரீதேவி மகள்களான ஜான்வி, குஷி ஆகியோர் குறித்து அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இதுபற்றி ஸ்ரீதேவி எப்படி எடுத்துக்கொள்கிறார். அவருடைய மகள்கள்?
இதுகுறித்து ஸ்ரீதேவி சமீபத்தில் கூறியதாவது:
என் மகள்களை ஊடகங்கள் கவனிப்பது எரிச்சலாகவே உள்ளது. சமீபத்தில் என் மகள் அவளைப் பற்றிய ஒரு வதந்தி குறித்து மிகவும் கவலைப்பட்டார். படுக்கையில் படுத்தபடி அதை எண்ணி வருத்தப்பட்டாள். அவளிடம் நான் சொன்னேன், இது எளிதான உலகம் அல்ல. இந்த உலகத்துக்கு உன்னை வரவேற்கிறேன். இதுதான் உன் துறை என்று நீ தேர்ந்தெடுத்தால் வதந்திகளுக்குத் தயாராக இரு என்று கூறினேன்.
என் மகள் ஜான்வி பாலிவுட்டில் நுழைய எனக்கு விருப்பம் இல்லை. ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 பட வாய்ப்பு அவளுக்கு வந்தபோது அதில் நடிக்கவேண்டாம் என்றே கூறினேன். ஆனால் அவள் அதில் நடிக்க விருப்பப்பட்டாள். இதை மோசமான துறை என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் நானும் இத்துறையைச் சேர்ந்தவள் தான். ஆனால் ஒரு தாயாக அவள் திருமணம் செய்வதே எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியானது. அதேசமயம் அவளுடைய விருப்பம்தான் முக்கியம். அவள் ஒரு நடிகையாகத் திறமையை வெளிப்படுத்தினால் நான் நிச்சயம் மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017ம் வருடம் அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம். 1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி துணைவன் படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான்.
ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகும் மாம் படம், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இந்த நான்குப் பதிப்புக்கும் சொந்தக் குரலில் பேசியுள்ளார் ஸ்ரீதேவி.
2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இதனால் தற்போது மாம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கறிக்கோழி பண்ணைகளுக்கு லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் விவசாயிகள்

2026-27 கல்வியாண்டு முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம்

ஒகேனக்கல் வனப் பகுதியில் சமையல் செய்வதை தடுக்க வலியுறுத்தல்

ஓஆர்எஸ்! கோடை பாதிப்பைத் தடுக்கும் கேடயம்!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


