ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

லூசுப்பசங்க: தமிழக அதிகாரிகளைத் தாக்கியவர்கள் மீது பாடகி சின்மயி சாடல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குத் திரைப்படப் பின்னணிப் பாடகி...

News image
Updated On :14 ஜூன் 2017, 8:13 am

ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குத் திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். 

பால் உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தின் ஓர் அம்சமாக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குப் பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளைக் கொள்முதல் செய்து வந்த தமிழக கால்நடைத் துறை அதிகாரிகள் மீது அம்மாநில பசுப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: 

வேலை இல்லாதவர்கள் செய்கிற காரியம் இது. அவர்களுக்கு வேலை என ஒன்று இருந்திருந்தால் இதைச் செய்ய நேரமிருக்காது. இல்லையெனில் இது அவர்களுக்கு இடப்பட்ட பணியாக இருக்கவேண்டும், இதெற்கென அவர்களுக்குத் தனிஊதியம் அளிக்கப்பட்டிருக்கவேண்டும். லூசுப்பசங்க... என்று காட்டமாக விமரிசனம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.