டோலிவுட்டைக் கலக்கி வரும் போதை மருந்து விவகாரத்தில் அக்கடபூபியில் பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், டான்ஸர்கள் எனப் பலரது பெயர் டேமேஜ் ஆகிக் கொண்டிருக்கிறது. அவர்களுள் பலர் தங்களது மேல் எந்தக் குற்றமும் இல்லை என்றும் போதை மருந்து கடத்தல், விற்றல் விவகாரத்தில் தங்களது பெயர் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது என்றும் புகார் அளித்துள்ளனர். கடந்த வாரம் இவ்விவகாரம் தொடர்பாக பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். அப்போது அவரது குடும்பம் மொத்தமும் அவருக்கு ஆதரவாக அவருடனிருந்தது. இவர்கள் தவிர பாகுபலி புகழ் ராணா டகுபதி மீதும் இதே விதமான குற்றச்சாட்டை முன்வைத்து தெலுங்கு ஊடகங்களில் வதந்தி பரவ, உடனடியாக சுதாரித்துக் கோண்ட ராணாவின் அப்பாவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளருமான சுரேஷ் டகுபதி, அம்மாதிரியான செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் கடும் ஆட்ஷேபம் தெரிவித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அவரைப் போலவே இன்று நடிகர் தருண் இவ்விசயத்தில் தனது ஆட்ஷேபத்தையும் பதிவு செய்துள்ளார்.