மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கேரள நடிகை வழக்கு: நடிகர் திலீப்பின் ஜாமின் மனு தள்ளுபடி!

காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட...

News image
Updated On :19 ஜூலை 2017, 7:08 am

கேரள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பின் போலீஸ் காவல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரள நடிகை, கொச்சி அருகே படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நடிகையை காரில் கடத்திய கும்பல், காரிலேயே 2 மணி நேரம் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது. பின்னர் பாதிவழியில் நடிகையை இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில், பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது அவர்கள் அளித்த தகவலின்பேரில், நடிகர் திலீப் கடந்த 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திலீப்பை 2 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அங்கமலேவில் இருக்கும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி அனுமதியளித்திருந்தது. அதன்படி, திலீப்பின் போலீஸ் காவல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அங்கமலே நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திலீப் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நடிகர் திலீப்பை மேலும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை பரிசீலித்துவிட்டு நீதிபதி கூறும்போது, திலீப்பை காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு மேலும் 2 நாள்கள் அவகாசம் அளித்தார்.

இந்நிலையில் திலீப்பின் ஜாமின் மனுவை அங்கமலே நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதனால் திலீப்பை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஆணையிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.