தன் மகன் அகில் அக்கினேனியின் படங்கள் சரியாகப் போகாத காரணத்தால், அவரது அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரீதேவியின் மகளான குஷி கபூரை, அகிலுக்கு கதாநாயகியாக்கும் படி.. நாகார்ஜூனா நேரில் சென்று ஸ்ரீதேவியிடம் கேட்டுக் கொண்டார் என்பதாக ஒரு செய்தி தெலுங்கு சினிமா உலகில் வதந்தியாக உலவிக்கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல டோலிவுட்டில் திறமைசாலி இயக்குனர்களுக்குப் பஞ்சமாகி விட்டதால் தான், புதிதாகத் திரைப்படங்கள் எதையும் அறிவிக்கத் தயங்கிக் கொண்டு, தான் அமைதி காப்பதாகவும் நாகார்ஜுனா குறிப்பிட்டதாகக் கூட ஒரு வதந்தி அக்கட பூமியில் உண்டு.