கோயம்புத்தூர் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் புலியகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோனியார் தேவாலயம். இது 162 ஆண்டுகள் பழமையான தேவாலயமாகும். 1859 ஆம் ஆண்டில் பாதர் டி கேலிஸ் (Fr.De Gelis) என்பவரால் கட்டப்பட்டது.

சிறிய தேவாலயமாக இருந்தது 1892 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின்பு, தற்போது கிறிஸ்துவர்களால் வணங்கப்பட்டு வரும் இந்த தேவாலயத்தின் அமைப்பு 12 ஜூன் 1987 ஆம் ஆண்டில் புதிய கட்டடம் அமைத்து புனிதப்படுத்தப்பட்டுள்ளது.
_.jpeg)
வரலாற்றில், புனித அந்தோனியார் எனப்படுபவர் கோடி அற்புதர் என கிறிஸ்துவர்களால் அழைக்கப்படுகிறார். புனித அந்தோனியார், குழந்தை இயேசுவை கைகளில் தாங்கி நிற்கும் ஓவியம் மிகவும் பிரபலமானது. இவர் 1195 ஆம் ஆண்டில் பிறந்தவர். காணாமல்போன பொருட்களைக் கண்டடைய, பேய்களை விரட்ட இவரின் துணையை நாடுவர் என இவரது வாழ்க்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
_.jpeg)
செவ்வாய்க் கிழமை இவருக்கு நவநாள் ஒப்புக்கொடுக்கும் நாள் எனக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் என ஒன்பது மாதங்களுக்கு நவநாள் அல்லது தொடர்ச்சியாக ஒன்பது செவ்வாய் என நவநாள் ஒப்புக்கொடுப்பர் என நம்பப்படுகிறது.

இந்த தேவாலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக வார நாள்களில் செவ்வாய்க்கிழமை புனித அந்தோனியாரின் ஒப்புக்கொடுக்கும் நாள் எனக் கருதப்படுவதால், அன்று சாதி, மதம் வேறுபாடின்றி அனைத்து மக்களையும் இந்த புனித அந்தோனியார் தேவாலயம் வரவேற்கிறது.
_.jpeg)
மேலும், புனித அந்தோனியாரை போற்றி செவ்வாய்க்கிழமைகளில் 4 புனித பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13 ஆம் தேதி அன்று புனித அந்தோனியார் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2000 ஆண்டுகள் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஆப்பனூரில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு!

பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் 9 ஆண்டுகளுக்கு பின்பு கைது

2000 ஆண்டுகள் பழமையான ஏழூர் கண்ணாடி பல்லக்குத் திருவிழா!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



