டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

News image
Updated On :14 ஜனவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

முனைவர் ம.பெ.சீனிவாசன்,

கட்டுரையாளர், விமர்சகர்.

சமகால நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், பிரச்னைகளின் கண்ணாடியாகவும், வாசகர் மனதில் பதிவதாகவும்  எழுத்துகள் இருப்பது அவசியம். தற்போது சமகாலப் பிரச்னைகளை மையப்படுத்தி சிறுகதைகள், கவிதைகள் என ஏராளமான படைப்புகள் வெளியிடப்படுவது வரவேற்புக்குரியது.

சு.தமிழ்ச்செல்வியின் "கீதாரி' நாவலானது, பிரபல எழுத்தாளர் மறைந்த கி.ராஜநாராயணனின் "கிடை' குறுநாவல் படைப்பைவிட வேறுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ராமநாதபுரத்திலிருந்து ஆடுகளுடன் இடம் மாறிச் செல்லும் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வியலை "கீதாரி' நாவல் படம் பிடித்திருப்பதுபோல உள்ளது. படைப்புகள் இதுபோல் இருக்க வேண்டும்.

மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைப்பதாக எழுத்தாளர்களின் எழுத்துகள் இருக்கும்போது, அதை அரசு கவனத்தில் கொண்டு பிரச்னைகளை அணுகி, தீர்க்கும் நிலை ஏற்படும். அப்படிச் செயல்படுவது என்பது அரசின் கடமையாகும்.

அதேபோல, மொழிபெயர்ப்பு நூல்கள் சிறப்பானவையாக இருப்பதும் அவசியம். "வால்கா  முதல் கங்கை வரை' எனும் நூலை தற்போது அ.மங்கை தமிழில் மொழி பெயர்த்துள்ளதைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.