தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

யாரெல்லாம் தைரியமான பெண்கள் தெரியுமா? ஹிலாரி கிளின்டனைக் கேளுங்கள்!

அம்மாக்கள் தங்கள் குட்டிப் பெண்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பேச்சு இது.புத்தகம் வெளிவரவிருப்பது அக்டோபர் 1, 2019. புத்தகத்தைப் படிக்க ஆர்வமிருப்பவர்கள் அதுவரை காத்திருங்கள்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2019, 12:20 pm

கட்ஸி வுமன் (GUTSY WOMEN) யாரெல்லாம் தெரியுமா? ஹிலாரி கிளின்டனைக் கேளுங்கள்!

முதல் முறையாக அம்மாவும் பெண்ணுமாகச் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். 

அம்மா ஹிலாரி கிளின்டன், பெண்... அவரது மகள் செல்ஸியா. 

புத்தகம் முழுக்கவும் பெண்களைப் பற்றித்தான் பேச்சு. ஆம், அம்மா ஹிலாரி கிளின்டன், மகள் செல்ஸியா கிளின்டனுடன் பகிர்ந்து கொண்ட தைரியமான பெண்களைப் பற்றிய தினசரிப் பேச்சைத்தான் இருவருமாகச் சேர்ந்து இப்போது கட்ஸி வுமன் என்ற பெயரில் புத்தகமாக்கியிருக்கிறார்கள். பேச்சு ரேடியம் கண்டுபிடித்த விஞ்ஞானி மேரி கியூரியில் இருந்து காலநிலை ஆர்வலர் (climate activist) கிரேட்டா தன்பெர்க் சவுதி களச் செயற்பாட்டாளரான மனால் அல் ஷெரிஃப் உட்பட கிட்டத்தட்ட 100 பிரபலமான பெண்களைப் பற்றி... அதாவது எதைப் பற்றியும் கவலைப்படாமல், எது குறித்தும் அஞ்சாமல் தாங்கள் மேற்கொண்ட பணியில் துணிச்சலுடன் இறங்கிச் செயல்பட்ட 100 பெண்களைப் பற்றியதாம். இது தொடங்கியது இன்று நேற்றல்ல. செல்ஸியா குழந்தையாயிருந்த போதே, ஹிலாரி அவரிடம் சொல்லத் தொடங்கிய, பகிரத் தொடங்கிய விஷயங்களின் தொகுப்பு தானாம் இது. 

அம்மாக்கள் தங்கள் குட்டிப் பெண்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பேச்சு இது.

புத்தகம் வெளிவரவிருப்பது அக்டோபர் 1, 2019. புத்தகத்தைப் படிக்க ஆர்வமிருப்பவர்கள் அதுவரை காத்திருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.