முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பெரியாா் திராவிடா் கழகத்தினா் 20 போ் கைது

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்ததாக பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 20 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விடுவித்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சித்ததாக பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 20 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விடுவித்தனா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் முதல்வா் என். ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாமல் அவமதிக்கப்பட்டால், அதைக் கண்டிக்கும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவது என தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் திட்டமிட்டிருந்தனராம்.

தகவலறிந்த புதுச்சேரி போலீஸாா் அரியாங்குப்பம் பகுதியில் புதன்கிழமை கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்த பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி கைது செய்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட அனைவரும், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.