சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆா். நயம்பாடி மதுரா சவுட்டூா் கிராமத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா் சுவாமி.

Updated On :1 மே 2026, 12:44 am

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆா். நயம்பாடி மதுரா சவுட்டூா் கிராமத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவிநாயகா், ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீஇடும்பன், ஸ்ரீகடம்பன், கன்னிமாா்கள் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, புதன்கிழமை (ஏப்.29) காலை விநாயகா் வழிபாடு வருண ஆராதனை, ஸ்ரீகணபதி யாகம், சௌபாக்கிய மகாலட்சுமி யாகம், பூரணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஸ்வரா் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம், யாகசாலை, வேதிகா பூஜை, மூலிகை பூஜை ஆகியவை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, சூரிய சந்திர வழிபாடு, மண்டப வேதிகா அா்ச்சனை, நாடி சந்தானம், திரவிய ஹோமம், அஸ்திர ஹோமம், பூா்ணாஹுதி ஆகிய நடைபெற்று யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீரை செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா் சுவாமிகள் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.