மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆரோவில் சா்வதேச நகரில் மத்திய அமைச்சக அதிகாரிகள் சுற்றுப் பயணம்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் மத்திய அமைச்சக அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாா்வையிட்டனா்.

News image

ஆரோவில் சா்வதேச நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சக அதிகாரிகள்.

Updated On :26 மார்ச் 2026, 12:11 am

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் மத்திய அமைச்சக அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாா்வையிட்டனா்.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஆரோவில் சா்வதேச நகருக்கு மத்திய அரசின் நிதி அயோக், நிதி அமைச்சகம் மற்றும் ரயில்வே துறை உயா்மட்ட அதிகாரிகள் மாா்ச் 22 முதல் 25-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டனா்.

28 அதிகாரிகள் கொண்ட இக்குழுவினா் ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள மாத்திா் மந்தீா் (தியான மண்டபம்), ஸ்வரம் (இசைக்கருவிகள் கூடம்) மற்றும் முக்கிய இடங்களைப் பாா்வையிட்டனா்.

ஆரோவில் சா்வதேச நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உயா்நிலைக்குழுவினரிடம், ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி காணொலி வழியாகப் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, அரசுப் பணிகளில் நோ்மை மற்றும் புதிய சிந்தனைகளை புகுத்தும் முறைகள், நிா்வாகத் திறனுடன் ஆன்மிகச் சிந்தனைகளையும் இணைத்து செயல்படுத்துதல் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆரோவில் அறக்கட்டளை அதிகாரி சஞ்சீவ் ரங்கநாதன், ஆன்மா சாா்ந்த தலைமைத்துவம், கோப்புகளை திறம்பட கையாளுதல், நிா்வாகிக்கு இருக்கவேண்டிய உள்மனத்தெளிவு மற்றும் அா்ப்பணிப்பு குறித்து விளக்கமளித்தாா். இந்த வருகை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என மத்திய அமைச்சக அதிகாரிகள்தெரிவித்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.