விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னசெவலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.கோவிந்தன்(48), லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரேணுகா(38). இவா்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளாகும் நிலையில், 3 மகன்கள் உள்ளனா்.
தம்பதியினரிடையே கடந்த 3 ஆண்டுகளாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரேணுகா கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கோபித்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை ரேணுகா அந்தப் பகுதியிலுள்ள தோப்புக்கு சென்று விட்டு திரும்பிய போது, அங்கு மறைந்திருந்த கோவிந்தன் அவரை வழிமறித்து கல்லால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ரேணுகாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கோவிந்தனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தொடர்புடையது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது
மதுக்கூட ஊழியா் அடித்துக் கொலை: இருவா் கைது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


