தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனா்.
இதற்கான அறிமுக விழா விழுப்புரத்தில் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள திருமண மண்டப அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சியின் கொடியை மாநிலத் தலைவா் பரிமணம் அறிமுகம் செய்து வைத்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:
விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில், பல்வேறு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில்தான் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவது கட்சியின் கொள்கையாகும். நலிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப் பேரவைத் தோ்தலில் 50 தொகுதிகளில் போட்டியிடுவது அல்லது விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றாா் பரிமணம். விழாவில் பல்வேறு நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு வன்னியா் அமைப்பு ஆதரவு

ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி: பெ. ஜான்பாண்டியன் தகவல்!

ராஜபாளையத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜான் பாண்டியனின் தமமுக!

ஜெயலலிதாவுக்குப் பின்.. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களால் உதயமான கட்சிகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


