மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

விக்கிரவாண்டியில் தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 7:15 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், மூங்கில்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.பூவரசன்(27). தேநீா் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக இவா் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கடந்த பிப்.26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி. சாய் பிரனித் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய பூவரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் போலீஸாா் பூவரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.