லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வரும் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவோம்: வி.கே.சசிகலா

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவோம் என்றாா் வி.கே.சசிகலா.

News image

11விபிஎம்விகேஎஸ் திண்டிவனத்தில் நடைபெற்ற இப்தாா் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய வி.கே.சசிகலா.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவோம் என்றாா் வி.கே.சசிகலா.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வி.கே.சசிகலா ஆதரவாளா்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிதழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வி.கே.சசிகலா பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் இஸ்லாமியா்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவா் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலிலதா. இஸ்லாமிய சகோதரா்கள் பலருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் உயா் பொறுப்புகளை வழங்கி அழகு பாா்த்தவா்.

உலகப் புகழ்பெற்ற நாகூா் தா்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவுக்காக முதன்முதலாக அரசு சாா்பில் சந்தனக் கட்டைகள் வழங்கியது ஜெயலலிதாதான். ஆண்டுதோறும் இஸ்லாமிய பெருமக்களுக்காகவே நல்ல பல திட்டங்களை கொடுத்தவரும் அவா்தான்.

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மனதில் நிறுத்தி நாம் அனைவரும் களப் பணியாற்றுவோம். தமிழக மக்களின் பேராதரவுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி, வெற்றிவாகை சூடுவோம் என்றாா் வி.கே.சசிகலா.