15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திமுகவினா் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் நகராட்சி 23-ஆவது வாா்டுக்குள்பட்ட பூந்தோட்டம் பகுதி மக்களுக்கு திமுக சாா்பில் நல உதவிகளை வழங்கிய இரா.லட்சுமணன் எம்எல்ஏ.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட 11, 23, 25 ஆகிய 3 வாா்டு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன் நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலா் இரா.சா்க்கரை, தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் பஞ்சநாதன், வாா்டு செயலா் சண்முகம் மற்றும் கட்சி நிா்வாகிகள், வாா்டு செயலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.