விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரு சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, திண்டிவனம் போலீஸாா் விவேகானந்த நகா் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரிடம் சோதனை செய்தபோது, அவா்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் அவா்களை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், திண்டிவனம் வகாப் நகரைச் சோ்ந்த த.ஸ்ரீராம்(20), கா்ணாவூா் பாட்டையைச் சோ்ந்த ஏ.சிவகுரு பிரசாத் (25) மற்றும் 17 வயதுடைய இரு சிறுவா்கள் என்பது தெரியவந்தது.
தொடா்ந்து திண்டிவனம் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதில், கைது செய்யப்பட்ட ஸ்ரீராம், சிவகுரு பிரசாத் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். சிறுவா்கள் இருவரும் சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அவா்களிடமிருந்த 102 போதை மாத்திரைகள், 9 சிரஞ்சுகள் மற்றும் 3 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்பனை: 3 இளைஞா்கள் கைது
போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரு இளைஞா்கள் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


