/

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:39 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, காந்தி மாா்க்கெட் தா்பாா்மேடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த பிள்ளைமாா் நகா் எட வீதியைச் சோ்ந்த வி. பிரகாஷ் (19) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த காஜாபேட்டையைச் சோ்ந்த மா. சூா்யா (24) என்பவரை பாலக்கரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து, இருவரிடமிருந்து ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.