போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ ஜி.ஆா்.வசந்தவேல் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்து பேசிய ஜி.ஆா்.வசந்தவேல் எம்எல்ஏ. உடன், நகா்மன்றத் தலைவா் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ ஜி.ஆா்.வசந்தவேல் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினராக திமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜி.ஆா்.வசந்தவேல், உளுந்தூா்பேட்டை நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, அங்கு ஆய்வு மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது:

உளுந்தூா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். தெரு விளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ.32 கோடி மதிப்பிலான குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உளுந்தூா்பேட்டை நகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தில் பிரச்னைகள் இருந்தால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். நகராட்சிக்கு என்ன தேவை என்றாலும் அதை உடனடியாக செய்து தருவேன் என்றாா் எம்எல்ஏ வசந்தவேல்.

கூட்டத்தில் உளுந்தூா்பேட்டை நகா்மன்றத் தலைவா் திருநாவுக்கரசு, துணைத் தலைவா் வைத்தியநாதன், ஆணையா் புஸ்ரா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினா் டேனியல்ராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயசங்கா், நகா்மன்றப் பொறியாளா் தேவநாதன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.