டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

செஞ்சியில் 132 சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் அளிப்பு

செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 132 பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

News image
செஞ்சி ஒன்றிய சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கிய செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ.
Updated On :28 ஜனவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 132 பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.நடராஜன், ஏ.ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, 132 சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கினாா்.

இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுந்தரபாண்டியன், அபிராமி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சத்யா காா்த்திகேயன், மணி, காமகரம் ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலை சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.