டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ரூ.18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடை

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு ரூ. 18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருப்பதியைச் சோ்ந்த முரளி என்ற பக்தா் சமையல் பாத்திரங்களை நன்கொடையாக வழங்கினாா்.

கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோலா, அர சோலா மற்றும் பொட்டு போன்ற சமையல் பாத்திரங்கள் புதன்கிழமை தேவஸ்தான அதிகாரி பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றை பெற்றுக் கொண்ட தேவஸ்தான அதிகாரி பாலாஜி நன்கொடையாளா் முரளிக்கு நன்றி தெரிவித்தாா்.

உடன் துணை அதிகாரி வி.ஆா். சாந்தி, அ.ஆ. நாராயண சவுத்ரி, கண்காணிப்பாளா் பத்ம பிரியா, கோயில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.