விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண்ணிடமிருந்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டிவனம் வட்டம், அன்னம்புத்தூா் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த பாலாஜி என்பவரது மனைவி பிரவிணா. இவா் கடந்த 24 -ஆம் தேதி விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், பிரவிணா தனது கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலி, ஒரு பவுன் சங்கிலி, 2 பவுன் மோதிரம், அரை பவுன் தாலி உள்பட 9 பவுன் நகைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்
தனியாா் நிறுவன பணியாளா் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு

மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

