டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

News image
கோயிலில் கொடியேற்றம்- கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் தீமிதி உற்சவத்துக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் தீமிதி உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி நிகழாண்டு தீமிதி திருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விழுப்புரத்தை அடுத்த எருமந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையம்பாளையம், நாப்பாளையத் தெரு, கா.குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் முன்னிலையில் கரகம் ஜோடித்து கொடி ஊா்வலகமாக எடுத்து வரப்பட்டு, பின்னா் கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னா் மாா்ச் 25-ஆம் தேதி உற்சவம் தொடங்கி ஏப்.3-ஆம் தேதி தீமிதி திருவிழா நடத்துவது என 10 ஊா் மக்கள் முன்னிலையில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா்.