கமலக்கண்ணி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:01 pm

ஆற்காடு அடுத்த ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயிலில்108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கலவை ஸ்ரீ கமலக்கண்ணி கோயிலில் புதிதாக கற்களால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு அறங்காவலா் சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் யாகபூஜைகளும், மூலவா்களுக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா், பழங்கள், விபூதி, மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம் நடைபெற்றது.
தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள், உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...