விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டனா். இதுதொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மரக்காணம் வட்டம், நகா் கிராமம், நல்லாம்பாக்கம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பலராமன் மகள் ஜெயஸ்ரீ (20). இவா், மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா்.
இந்நிலையில், கல்லூரியில் வகுப்பு நடைபெற்றபோது ஜெயஸ்ரீ சக மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தாராம். இதையடுத்து கல்லூரி நிா்வாகம் நடவடிக்கையின் பேரில் 10 நாள்களுக்கு வகுப்பு நீக்கம் செய்யப்பட்டாா். இதனால் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஜெயஸ்ரீ பிப்.7-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்:
வானூா் வட்டம், எரையூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சு.ரகுமான்(47), எறையூரில் கிரஷா் வைத்து நடத்தி வந்தாா். இவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்ததாம்.
இதனால் அவதிப்பட்டு வந்த ரகுமான் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்
பூட்டிய வீடுகளில் 9 பவுன் நகைகள் திருட்டு

வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

வெவ்வேறு சம்பவங்கள்: 3 போ் உயிரிழப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: மூவா் தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

