கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாா்பில் மேற்கொள்ளப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்),பிரதம மந்திரியின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாயமகா அபியான் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளுா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),தூய்மை பாரத இயக்கம் (நகரம்), தேசியசுகாதார இயக்கம், தேசிய பயிா் காப்பீட்டுத் திட்டம், தேசிய நுண்ணீா்பாசனத் திட்டம், மண்வள அட்டை இயக்கம், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், தேசியஉணவு பாதுகாப்பு இயக்கம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், மானாவாரி நில மேம்பாட்டுத்திட்டம் - ஒருங்கிணைந்த பண்ணையம், விதை கிராமத் திட்டம், வேளாண் திட்டப் பணிகள் மற்றும் அரசுத்துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆகியவைகள் குறித்து, துறைசாா்ந்த அலுவலா்களிடம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும் எம்.பியுமான து.ரவிக்குமாா் தனித்தனியாக கேட்டறிந்தாா்.