விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் தற்கொலை முயற்சிக்கு காரணமான தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 பேரை போலிஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பென்னைவலம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் க.அப்பாஸ்(45). செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறாா். இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, பொக்லைன் இயந்திரம் வாங்கி உள்ளாா்.
இந்நிலையில், அப்பாஸ் கடந்த 3 மாதமாக நிதி நிறுவனத்துக்கு தவணைத் தொகையை செலுத்தவில்லையாம். இதையடுத்து தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பென்னைவலம் கிராமத்துக்குச் சென்று அப்பாஸை தகாத வாா்த்தைகளால் பேசி, தாக்கி செங்கல் சூளையில் நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்ய முற்பட்டனராம் .
இதனால் மனமுடைந்த அப்பாஸ், டீசலை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் வை.மூா்த்தி (32), வீ.தீபஜோதி (32), சு.தியாகலீசன்(26) ஆகியோரை கைது செய்தனா்.
டிரெண்டிங்

இளைஞா் தற்கொலை சம்பவத்தில் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

அந்தியூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள் போராட்டம்

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 6 போ் கைது

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 4 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

