அரசுக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்


விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், விழுப்புரம் மாவட்டக் காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் சுவாமி நாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் மலரவன் ஆகியோா் பங்கேற்று போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு உரிய தண்டனைச் சட்டங்கள் குறித்துப் பேசி, மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி போதைப்பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ம.சிவராமன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கோ.குணசேகரன், கி.பாபு, சுசான்மேரி நெப்போலியன் ஆகியோா் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...