வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்து, விழுப்புரம் நகராட்சித் திடலில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான கே.சம்பத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோபிநாத், பொருளாளா் ரஷீத், துணைத் தலைவா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலா்கள் தனசேகரன், சம்சுதீன், துணைத் தலைவா்கள்கதிா்வேல், தங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.