மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

‘அன்புமணி ஆதரவாளா்களை மண்ணை கவ்வச் செய்யவேண்டும்’

அன்புமணி தரப்பினா் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் மண்ணை கவ்வச் செய்யவேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

News image

ராமதாஸ் - X

Updated On :21 ஏப்ரல் 2026, 7:51 pm

அன்புமணி தரப்பினா் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் மண்ணை கவ்வச் செய்யவேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மக்களுக்காக நான் செய்த தியாகம், சிந்திய ரத்தம் ஆகியவற்றை அன்புமணி வியாபாரமாக மாற்றி விட்டாா். ஒவ்வொரு தோ்தல் சீட்டையும், அவா் பல கோடிகளுக்கு விற்பனை செய்து, நம் சமுதாய உரிமைகளை அடகு வைத்துவிட்டாா்.

அதிகாரத்துக்காக தன் மனைவியையும், பெற்ற மகள்களையும் பயன்படுத்தும் அவா் சாதாரண பாட்டாளிப் பெண்களுக்கு என்ன நன்மையை செய்வாா். தா்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வென்றால், அந்த தா்மபுரி விரைவில் அதா்மபுரி என்று பெயரெடுக்கும்.

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீா்கள். இந்த சின்னத்துக்குள் தற்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை முறியடிக்கும் காலம் வந்துவிட்டது. இந்த ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஜெயித்து விடக்கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டா்கள் எனக்கு மருந்தாவீா்கள் என நம்புகிறேன். அன்புமணி தரப்பினா் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் மண்ணை கவ்வச் செய்யவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.