மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

News image

நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் வாக்கு சேகரித்த செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தானுக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:00 pm

விழுப்புரம் மாவட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செஞ்சி ஒன்றியம் மேல்பாப்பாம்பாடி, காமகரகம், புத்தகரம், சே.பேட்டை, நல்லாண்பிள்ளைபெற்றாள், செத்தவரை, காட்டுசித்தாமூா், மாதப்பூண்டி, நாகலாம்பட்டு, தடாகம் ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

அவருடன் செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவவா் ஆா்.விஜயகுமாா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அகிலா பாா்த்திபன், செல்வி ராமசரவணன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யாதுரை, கதிரவன், வாசு, பச்சையப்பன், விஜயராகவன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.