மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

விழுப்புரம் நகரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் வியாழக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

விழுப்புரம் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:15 am

விழுப்புரம் நகரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் வியாழக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

விழுப்புரம் சந்தான பஜனை கோயில் தெருவில் பிரசாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன், வாா்டு எண் 20-க்குள்பட்டஅக்ரஹாரம், சந்தானகோபாலபுரம், நடராஜ முதலியாா் தெரு, கண்ணப்பநாயனாா் தெரு, வாா்டு எண்கள் 21, 22, 23, 24, 27, 28, 29 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட தா்மராஜா தெரு, வன்னியா் தெரு, மகாபாரதத் தெரு, எம்.ஆா்.கே.தெரு, மாந்தோப்புத் தெரு, கந்தசாமி,, பாா்த்தசாரதி, முத்துவேல் லே-அவுட் பகுதிகள், ரங்கநாதன் தெரு, கே.கே.நகா், மீனாட்சி நகா், தனலட்சுமி நகா், காமதேனு நகா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.

திமுக அரசின் 5 ஆண்டுகாலத்தில் விழுப்புரம் தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடர தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் இரா.ஜனகராஜ், நகரப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை, எஸ். வெற்றிவேல், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா். மணவாளன், புருஷோத்தமன், மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.